ADDED : மார் 06, 2026 05:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் பிளஸ் 2 ஆங்கிலப் பொதுத் தேர்வில் 607 மாணவர்கள் பங்கேற்கவில்லை.
மாவட்டத்தில் 109 மையங்களில் 33 ஆயிரத்து 794 மாணவர்கள் இத்தேர்வில் பங்கேற்றனர். தனித் தேர்வர்கள் 704 பேர், மத்திய சிறையில் 55 கைதிகளும் தேர்வு எழுதினர்.
நோடல் அலுவலரான இணை இயக்குநர் மார்ஸ் தியாகராஜர் மாதிரி, நிர்மலா, செயின்ட் மேரிஸ், யு.சி., பள்ளி களையும், சி.இ.ஓ., தயாளன் ஈ.வெ.ரா. மாநகராட்சி, மங்கையர்கரசி, பிரிட்டோ மேல்நிலைப் பள்ளிகளிலும் தேர்வுப் பணிகளை கண்காணித்தனர்.

