ADDED : ஜூலை 26, 2025 04:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: நாகர்கோவிலில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான ஜூடோ போட்டி நடந்தது. இதில் மேலுார் ஜாஸ் பள்ளி பிளஸ் 1 மாணவர்கள் கஜகேஸ்வர் தங்கம் வென்றார்.
பிரத்தீஷ், தமிழரசன், புகழ், கிரித்திக்ஸ்ரீராஜ், தர்சத்பரன் வெண்கலம் வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சென்னை விழாவில் துணைமுதல்வர் உதயநிதி, அமைச்சர் மகேஷ் பரிசு வழங்கினர். பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில் மாணவர்களை தாளாளர் ஜெயந்த் வேதசாம், முதல்வர் ஜெயபிரகாஷ், பயிற்சியாளர் பிரசன்னா கவுரவித்தனர்.