sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

நிபந்தனைகளால் காற்றாடும் ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகள்

/

நிபந்தனைகளால் காற்றாடும் ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகள்

நிபந்தனைகளால் காற்றாடும் ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகள்

நிபந்தனைகளால் காற்றாடும் ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகள்


ADDED : ஜூலை 07, 2025 03:29 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 03:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. ஒருகாலத்தில் மாணவர்கள் சேர்க்கைக்கு இடமில்லாத நிலைமை இருந்தது. தற்போது மாணவர்கள் குறைந்து காற்று வாங்கும் நிலைக்கு விடுதிகள் தள்ளப்பட்டுள்ளன. இதனால் பல விடுதிகளை மூடவும் முயற்சிகள் நடக்கின்றன.

இதற்கு காரணம் விடுதியில் மாணவர்கள் சேர்க்கைக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகளே. ஐந்து கி.மீ.,க்குள் இருக்கும் மாணவர்களுக்கு விடுதி வசதி கிடையாது.

அதற்கு அப்பால் உள்ள மாணவர்களே விடுதியில் சேர்க்கப்பட வேண்டும் என்று இந்தாண்டு தெரிவித்துள்ளனர். சில சிறப்பு அனுமதி உள்ளவர்கள் குறிப்பாக மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர், ஒரு பெற்றோரை கொண்டவர்கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் அருகில் உள்ள மாணவர்கள் பலர் விண்ணப்பித்தும் விடுதிகளில் சேர முடியாமல் தவிப்பில் உள்ளனர்.

பெற்றோர் சிலர் கூறுகையில், ''அரசின் நலத்திட்டங்கள் மூலம் பள்ளிகளில் வழங்கப்படும் உணவுக்கு குறிப்பாக காலை உணவு, மதியம் சத்துணவு போன்றவற்றுக்கு எந்தவித சிறப்பு அனுமதியும் கிடையாது. எல்லோருக்கும் வழங்கப்படுகிறது. அதுபோல இங்கும் இருக்க வேண்டும்'' என்றனர்.

பல குடும்பங்களில் பெற்றோர் இருந்தும் அவர்களின் வறுமையால் பல மாணவர்கள் உணவுக்கும், பயணச் செலவுக்கும் வழியின்றி படிப்பை கைவிடும் நிலையில் உள்ளனர். பெற்றோர் உடல்நிலை சரியில்லாத நிலையில், மாணவர்களை அவர்களால் பராமரிக்க முடியாத நிலையும் உள்ளது. சில மாணவிகள் தாத்தா, பாட்டி, உறவினர் வீடுகளில் தங்கி பயில்கின்றனர்.

அவர்களுக்கு தேவையான தங்கும் வசதி, உணவு வசதி இல்லாததால் படிப்பை கைவிட்டு குழந்தை தொழிலாளராக மாறும் நிலையும் உள்ளது. அவர்களுக்கு வருவாய்த் துறையின் ஆதரவற்றோர் என்ற சான்றும் கிடைப்பதில்லை.

காலை, மதிய உணவு எல்லோருக்கும் உண்டு. கட்டுப்பாடுகள் இல்லை. ஆனால் விடுதி மாணவர்களுக்கு நிபந்தனைகள் உள்ளன. மாணவர்கள் வருகையை பயோமெட்ரிக் மூலம் கண்காணிப்பதால் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை. அப்புறம் ஏன் இக்கட்டுப்பாடுகள் தேவை என தெரியவில்லை.

ஐந்து கி.மீ.,க்குள் உனது வீடு உள்ளது. எனவே விடுதியில் அனுமதி இல்லை என்று அனுப்பிவிடுகின்றனர்.

உணவு, கல்வியை தேடி வரும் ஆதரவற்ற மாணவர்களுக்கு அதனை அளிப்பது அரசின் கடமை. பிற்படுத்தப்பட்டோர் உட்பட இதர விடுதிகளில் இந்த நிபந்தனைகள் இல்லை என்கின்றனர்.

எனவே இதுபோன்ற நிபந்தனைகளால் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இதனால் எல்லா மாவட்டங்களிலும் ஒற்றை இலக்கத்தில் விடுதிகளை மூடும் நிலைக்கு செல்வதாக பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us