/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரூ.125 கோடி மோசடி செய்த ஏஜன்ட் கைது
/
ரூ.125 கோடி மோசடி செய்த ஏஜன்ட் கைது
ADDED : பிப் 12, 2024 11:21 PM

மதுரை : மதுரை எஸ்.எஸ்.காலனியில் இயங்கிய நியோமேக்ஸ் நிதி நிறுவனம் மக்களிடம் பல கோடி ரூபாய் முதலீடு பெற்று மோசடி செய்தது. இதன் இயக்குனர்கள் வீரசக்தி, கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
அதன், 17 நிறுவனங்களுக்கு, 'சீல்' வைக்கப்பட்டு, 17.25 கோடி ரூபாய் மதிப்பிலான 752 வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்பட்டன.
இந்நிலையில், விருதுநகரில் செயல்பட்டு வந்த இதன் துணை நிறுவனமான குளோமேக்ஸின் ஏஜன்ட் தியாகராஜன், 36, என்பவரை மதுரை பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி., மணீஷா தலைமையிலான போலீசார் நேற்று கைது செய்தனர்.
இவர், 500 - 600 பேரிடம், 125 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார். பணத்தை திரும்ப கேட்ட முதலீட்டாளர்களிடம், மனைகள் வாங்கி தருவதாக கூறி மேலும் பணம் பெற்று தியாகராஜன் மோசடி செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.