ADDED : ஜன 25, 2026 05:02 AM
அ நிறம் | அளவு
உசிலம்பட்டி: உசிலம்பட்டி உழவர் சந்தை வளாகத்தில் தேனி குள்ளப்புரம் வேளாண் தொழில்நுட்பக்கல்லுாரி மாணவர்கள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் வேளாண் கண்காட்சி நடத்தினர்.
வேளாண் அலுவலர் கீதா, துணை அலுவலர் குமரப்பன், உதவி விதை அலுவலர் சிவசங்கர், உழவர் சந்தை நிர்வாக அலுவலர் சமுத்திர பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஒருங்கிணைந்த பண்ணை, நெல்லில் சொட்டு நீர் பாசனம், மானிய, காப்பீடு திட் டங்கள் குறித்து காட்சிப்படுத்தி விவசாயிகளுக்கு விளக்கமளித்தனர்.
