நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் : அ.தி.மு.க., மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் சார்பில் கள்ளிக்குடி கிழக்கு, வடக்கு, மேற்கு ஒன்றியங்களில் பொதுக்குழு தீர்மானங்கள் விளக்கம், பூத் முகவர்கள் நியமிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் நடந்தது.
முன்னாள் எம்.எல்.ஏ., க்கள்., மாணிக்கம், மகேந்திரன்., ஒன்றிய செயலாளர்கள் ராமையா, கண்ணன் பிரபு சங்கர், ஜெ., பேரவை மாநில துணை செயலாளர் வெற்றிவேல், மாவட்ட அவைத் தலைவர் முருகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.