ADDED : மார் 29, 2026 05:16 AM
அ நிறம் | அளவு
மதுரை: தாம்பிராஸ் எஸ் எஸ் காலனி டிரஸ்ட், தமிழ்நாடு பிராமண சங்கம் எஸ். எஸ். காலனி கிளை இணைந்து பராபவ வருஷ பஞ்சாங்கம் வெளியிடும் விழாவை நடத்தின.
விழாவையொட்டி எஸ்.எஸ்.காலனியில் உள்ள டிரஸ்ட் திருமண மண்டபத்தில் உலக நன்மை கருதி ஸ்ரீ மகா கணபதி ஹோமம், நவகிரக, சுதர்சன, மகாலட்சுமி ஹோமங்கள் ஏ.சிவகுமார் சர்மா தலைமையில் நடந்தது. பஞ்சாங்கத்தை மதுரை தெய்வ நெறிக் கழகத்தின் தலைவர் சுவாமி சிவானந்த சுந்தரானந்தா வெளியிட ட்ரஸ்டின் தலைவர் கணபதி நரசிம்மன் பெற்றுக் கொண்டார்.
சிவானந்த வித்யாலயா தாளாளர் பாபுஜி, டிரஸ்ட் நிர்வாகிகள் சீனிவாசன், ஸ்ரீகுமார், ராமன், சேகர், ஜெயஸ்ரீ, சசி ராமன், குரு ராஜன், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பஞ்சாங்கம், பிரசாதம் வழங்கப்பட்டது.
