ADDED : மார் 29, 2026 11:24 PM
அ நிறம் | அளவு
மதுரை: டி.வி.எஸ்., நகரில் தமிழ்நாடு பிராமணர் சங்கம், பாரதியார் கிளை சார்பில் பராபவ வருஷ பஞ்சாங்கம் வெளியிடும் விழா நடந்தது. கிளைத் தலைவர் முரளி தலைமை வகித்தார். பஞ்சாங்கத்தின் முதல் பிரதியை பாரதியார் கிளைத் தலைவர் முரளி வெளியிட, மாவட்ட தாம்ப்ராஸ் பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் பெற்றார்.
இரண்டாவது பிரதியை முன்னாள் மதுரை மாவட்ட தலைவர் ரங்கராஜன் வெளியிட, எச்.டி.எப்.சி., வங்கி மேலாளர் பாலமுரளிகிருஷ்ணன் பெற்றார். செயலாளர் ஸ்ரீதரன், பொருளாளர் நாராயணன் பங்கேற்றனர்.
