நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் விருதுநகர் மாணிக்கம் நாடார் ஜானகி அம்மாள் பள்ளி ஆண்டு பொன்விழா செயலாளர் திவ்யன் தயாளன் தலைமையில் நடந்தது.
நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும், தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்களுக்கும் தனியார் நிறுவன சேர்மன் சந்திரமோகன் பரிசு வழங்கினார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தனியார் நிறுவன இயக்குநர் மகேஸ்வரன் பரிசு வழங்கினார். பள்ளி நிர்வாகிகள் ராஜ்குமார், முத்துசாமி, கந்தசாமி, அஜய் தீபக், காளிசரண் ஏற்பாடுகளை செய்தனர். முதல்வர் செந்தில் நாயகி நன்றி கூறினார்.

