ADDED : டிச 01, 2024 04:26 AM
மதுரை : மதுரை பெசன்ட் ரோடு காஞ்சி காமகோடி மடத்தில் மஹா பெரியவரின் ஜன்ம நட்சத்திரமான அனுஷ விழா நேற்று நடந்தது. மிருத்யுஞ்ஜய ேஹாமம், ஆவஹந்தி ேஹாமம் தொடர்ந்து மஹா பெரியவர் விக்ரகத்திற்கு அபிேஷகம், அலங்காரம் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சொற்பொழிவாளர் இந்திரா செளந்தர்ராஜனுக்கு பக்தர்கள் நினைவு அஞ்சலி செலுத்தினர். ஏற்பாடுகளை மடத்தின் தலைவர் டாக்டர் ராமசுப்பிரமணியன், செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் வெங்கட்ரமணி, நிர்வாகிகள் செய்திருந்தனர்.
சோழவந்தான்: காஞ்சி காமகோடி பீடம் சோழவந்தான் மலையாளம் கிருஷ்ண அய்யர் பாடசாலையில் அனுஷ வைபவத்தை முன்னிட்டு உலக நன்மை கருதி ரிக் வேத பாராயணம் நடந்தது. பூஜை, தீபாராதனை முடிந்து அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
முள்ளிப்பள்ளம் கிளையில் அனுஷ வைபவத்தையொட்டி மஹா பெரியவாளுக்கு பூஜை, தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை நிர்வாகி ஸ்ரீகுமார், பாலசுப்பிரமணியன், அத்யபகர் வரதராஜ பண்டிட்ஜி, வெங்கட்ராமன், வீர மணிகண்டன் செய்திருந்தனர். இந்த மடத்தில் தினமும் மாலை 131 மாணவர்கள் இலவச கல்வி பயின்று வருகின்றனர். நாட்டு பசு மாடுகள் கோசாலையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.