நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை பாத்திமா கல்லுாரியில் வணிக வியல் துறை சார்பில் கல்லுாரிகளுக்கு இடையேயான கலைப் போட்டிகள் நடந்தன. செயலாளர் இக்னேஷியஸ் மேரி தொடங்கி வைத்தார்.
துறைத் தலைவர் பாத்திமா ரோசலின் மேரி வரவேற்றார். பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த மாணவர்கள் தனி நபர், குழுக்களாக போட்டிகளில் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர். அமெரிக்கன் கல்லுாரி மாணவர்கள் முதலிடம் பெற்று கேடயம் வென்றனர். வென்ற மாணவர்களுக்கு நிறைவு விழாவில் துபாய் பரதநாட்டிய கலைஞர்கள் நலமேம்பாட்டு கழக நிர்வாகக் குழு உறுப்பினர் ராஜராஜேஸ்வரி பரிசு வழங்கினார். உதவி பேராசிரியை லுாசியா வனிதா ஒருங்கிணைத்தார்.

