sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 திருமங்கலத்தில் அஷ்டமி சப்பரம்

/

 திருமங்கலத்தில் அஷ்டமி சப்பரம்

 திருமங்கலத்தில் அஷ்டமி சப்பரம்

 திருமங்கலத்தில் அஷ்டமி சப்பரம்


ADDED : ஜன 12, 2026 05:42 AM

Google News

ADDED : ஜன 12, 2026 05:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம்: அனைத்து ஜீவராசிகளுக்கும் படி அளப்பதை உறுதி செய்யும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமி அன்று அஷ்டமி சப்பர திருவிழா நடைபெறும்.

திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் அஷ்டமி சப்பர திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை திருக்கல்யாண மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளான மீனாட்சி, சொக்கநாதர், பிரியாவிடையுடன் எழுந்தருளினர். அவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. பின்பு அஷ்டமி சப்பரத்தில் மீனாட்சி சொக்கநாதர் பிரியாவிடை எழுந்தருளினர். முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் நடந்தது.

பக்தர்கள் வழிநெடுக திருக்கண் வைத்து வழிபாடு செய்தனர். வழிபாடு செய்த பக்தர்களுக்கு அரிசி தானம் வழங்கப்பட்டது. சப்பரத்தின் பின்னால் அரிசியை சிவாச்சாரியார்கள் சாலையில் தூவி சென்றனர்.

ஏற்பாடுகளை தர்கார் சுசிலா ராணி, நிர்வாக அதிகாரி அங்கையர்கண்ணி செய்திருந்தனர். பூஜைகளை கோவில் சிவாச்சாரியார் சங்கரநாராயணன் செய்திருந்தார்.






      Dinamalar
      Follow us