ADDED : நவ 26, 2024 05:25 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை எஸ்.எஸ்.காலனி ஸத்சங்கம் கோயிலில் மஹாதேவ அஷ்டமி வைபவம் நேற்று காலை பிரகாஷ் வாத்யார் தலைமையில் நடந்தது.
வேத விற்பனர்களைக் கொண்டு காலை 7:00 மணிக்கு சங்கல்பத்துடன் துவங்கியது. தொடர்ந்து மஹன்யாசம், 11 ஆவர்திகள் ருத்ராபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமிக்கு அலங்காரம், ஸகஸ்ர நாம அர்ச்சனை ருத்ரஹோமம், துலாபாரம், மகா தீபாராதனை நடந்தது. அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது. ஸத்சங்க செயலாளர் ராமச்சந்திரன், பொருளாளர் ராமமூர்த்தி, முன்னாள் செயலாளர் ஸ்ரீராமன், நிர்வாகிகள் ராமசாமி, ராமன் ஏற்பாடுகளை செய்திருந்தனர். சிறப்பு அலங்காரத்தை ஸ்ரீவினோத், முரளி செய்திருந்தனர்.
