/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மின் ஊழியர் மீது தாக்குதல்; பணியாளர்கள் போராட்டம்
/
மின் ஊழியர் மீது தாக்குதல்; பணியாளர்கள் போராட்டம்
ADDED : பிப் 21, 2024 06:10 AM

உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் மின் இணைப்புக்கான கட்டணம் செலுத்தாத வீட்டில் மின் இணைப்பை துண்டித்த மின்வாரிய பணியாளரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அனைத்து சங்க பணியாளர்களும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உசிலம்பட்டி மின் அலுவலக கேங்மேன் ஸ்ரீகுமார் 29. இவர் எ.புதுப்பட்டி மாயி 55, வீட்டின் மின் இணைப்புக்கான கட்டணத்தை செலுத்தாததால் மின் இணைப்பை துண்டித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு ஸ்ரீகுமாரை மாயி, மகன் சூரியபிரகாஷ் தாக்கினர். இதுகுறித்து உத்தப்பநாயக்கனுார் போலீசில் புகார் செய்யப்பட்டது. நேற்று காலை 9:00 மணிக்கு அனைத்து சங்கங்களின் மின் பணியாளர்கள் செயற்பொறியாளர் அலுவலகத்தில் மதியம் 2:00 மணி வரை உள்ளிருப்பு பேராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீஸ் தரப்பில் 'மாயி கைது செய்யப்பட்டார். அவரது மகனை விரைவில் கைது செய்து விடுவோம்' என தெரிவித்தபின் பணிக்குச் சென்றனர்.

