ADDED : டிச 17, 2024 04:14 AM
அ நிறம் | அளவு
உசிலம்பட்டி: உசிலம்பட்டி வட்டார வள மையத்தில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடந்தது.
மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுவாமிநாதன், உதவித் திட்ட அலுவலர் சரவணமுருகன், வட்டாரக் கல்வி அலுவலர்கள் திலகவதி, தேவி, ஒருங்கிணைப்பாளர் சூரியகலா, மைய மேற்பார்வையாளர் ரமேஷ்ராஜ், உள்ளடக்கிய கல்வி ஒருங்கிணைப்பாளர் மஞ்சு, ஆசிரியர் பயிற்றுநர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். மாற்றுத் திறனாளி மாணவர்கள் 70 பேருக்கு மதிப்பீடு நடந்தது.
