ADDED : ஏப் 25, 2025 06:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருங்குடி: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி தொழில் வழிகாட்டுதல், வேலை வாய்ப்பு மையம் சார்பில் கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. கல்லுாரிச் செயலாளர் நாராயணன் தலைமை வகித்தார். முதல்வர் சந்திரன், துணை முதல்வர் கணேசன் முன்னிலை வகித்தனர்.
20க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் வேலைக்கான தேர்வு நடத்தினர். 260 மாணவர்கள் வேலை வாய்ப்பு பெற்றனர். அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் சரவணகுமார், பேராசிரியர்கள் நாராயணமூர்த்தி, சுப்பிரமணியன், ராமகிருஷ்ணன், ஆதிபெருமாள்சாமி, அழகுமுருகன், முகமதுஅலி, கவுரிசங்கரி, பரிமளா தேவி, ஜெயதேவி, ஜோதி, ரெஜினி ஒருங்கிணைத்தனர்.