ADDED : ஜன 07, 2024 06:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருமங்கலம் அருகே ஆலம்பட்டியில் தனியார் வங்கி ஏ.டி.எம்.,மில் நேற்று முன்தினம் இரவு கண்காணிப்பு கேமராக்களை உடைத்து கொள்ளை முயற்சியில் மர்மநபர்கள் ஈடுபட்டனர்.
டிஸ்ப்ளே ஸ்கிரீனை உடைத்து பணம் இருக்கும் பெட்டியை திறக்க முடியாததால் அப்படியே விட்டுவிட்டு சென்றனர். இதனால் ரூ. 6 லட்சம் தப்பியது. போலீசார் விசாரிக்கின்றனர்.