ADDED : டிச 30, 2024 06:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: கேசம்பட்டி மந்தையில் டங்ஸ்டன் சுரங்க அனுமதியை ரத்து செய்யக்கோரி கிராம மக்கள் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர்.
இப் போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் கும்மி கொட்டியும், குலவையிட்டும் எதிர்ப்பு தெரிவித்தனர். கிராம மக்கள் கூறுகையில், ''5 ஆயிரம் ஏக்கர் பரப்பில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு கொடுத்த அனுமதியை நிரந்தரமாக ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும். ஜன.7 ல் விவசாய சங்கம் நடத்தும் நடைபயணம், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க உள்ளதாக கிராமத்தினர் தெரிவித்தனர்.

