நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் இந்திய தணிக்கைத் துறையின் முதுநிலை துணை கணக்காய்வுத் தலைவர்கள் விஸ்வநாதன், எம்.எஸ்.ரெமா ஆகியோர் தலைமையில் மதுரை மாவட்ட உள்ளாட்சி, நகராட்சி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு தணிக்கை வாரவிழா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
ஒத்தக்கடை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மீனாட்சி அரசு பெண்கள் கல்லுாரியில் இந்நிகழ்ச்சிகளை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் உதவி இயக்குனர்கள் அரவிந்த்முத்தையா, ராமச்சந்திரன், விசாலாட்சி, உதவிதிட்ட அலுவலர் ஜெயராஜ் பங்கேற்றனர்.