ADDED : பிப் 13, 2024 04:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : தமிழகம் முழுவதும் காலநிலை, மழை அளவு ஆகியவற்றை துல்லியமாக கண்காணிக்க 1400தானியங்கி மழைமானிகள், 100 தானியங்கி வானிலை நிலையம் அமைக்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
மதுரை மாவட்டத்தில்35 புதிய தானியங்கி மழைமானிகள், 3 தானியங்கி வானிலை மையங்கள் நிறுவும் பணி நடந்து வருகிறது. இவை விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.