நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாடிப்பட்டி சட்ட பணிகள் குழு சார்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. தலைமை ஆசிரியர் வாசிமலை தலைமை வகித்தார்.
உதவி தலைமை ஆசிரியர் மரிய ஜோசப் ராஜ் முன்னிலை வகித்தார். உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ராம் கிஷோர் தலைமையில் வழக்கறிஞர்கள் சீனிவாசன், முத்துமணி, விஜயகுமார், அழகர்சாமி, சுமிதா ஆகியோர் பேசினர். ஆசிரியர் சக்திகுமார் நன்றி கூறினார்.

