ADDED : ஜன 31, 2026 06:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மாவட்ட போலீசார், மதுவிலக்கு அமலாக்கம், தமிழ்நாடு குடிமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு முகாம் நடந்தது.
இதுகுறித்த போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா கருப்பாயூரணி அப்பர் பள்ளியில் நடந்தது. மையத்தின் மாநில தலைவர் கர்ணன் தலைமை வகித்தார்.தலைமை ஆசிரியர் அங்குராஜன் முன்னிலை வகித்தார். உதவித் தலைமை ஆசிரியர் ஜீவா வரவேற்றார். போதை ஒழிப்பு, பாலியல் சட்டங்கள் குறித்து வழக்கறிஞர் சாமிதுரை பேசினார். முன்னதாக மாணவர்களுக்கு டி.எஸ்.பி., பாஸ்கரன் பரிசு வழங்கினார். போதை ஒழிப்பு குறித்து உறுதிமொழி எடுத்தனர். ஒருங்கிணைப்பாளர் காந்திமதியை பாராட்டி பேசினர். தமிழாசிரியர் சரவணகுமார் நன்றி கூறினார்.

