நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி : உசிலம்பட்டி வட்டாரத்தில் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு சிறுதானியங்களின் மதிப்பு கூட்டுதல் தொழில் நுட்பங்கள் குறித்த உள் மாநில அளவிலான கண்டுணர்வு பயணம் நடந்தது.
உசிலம்பட்டி, செல்லம்பட்டி, கல்லுப்பட்டி வட்டாரங்களில் இருந்து விவசாயிகள் கோயம்புத்துார் தமிழ்நாடு வேளாண்மை பல்கலை மக்காச்சோளம் ஆராய்ச்சி நிலையத்திற்கு சென்றனர். நிலைய தலைவர் செல்வகுமார், இணை பேராசிரியர் சத்தியசீலா, திண்டுக்கல் தனியார் நிறுவனத்தின் கயல்விழி சிறுதானிய சாகுபடியில் நவீன தொழில்நுட்பம், மதிப்புகூட்டி விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் கூடுதல் வருவாய் குறித்து விளக்கமளித்தனர்.
ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஜோதிலட்சுமி, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ராஜேந்திரன், ராஜகோபாலன் செய்திருந்தனர்.

