ADDED : மார் 14, 2024 04:08 AM
அ நிறம் | அளவு
திருமங்கலம்: திருமங்கலம் சட்டசபை தொகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி திருமங்கலம் அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
ஊர்வலத்தை ஆர்.டி ஓ., சாந்தி தொடங்கி வைத்தார். தாசில்தார் மனேஷ்குமார், கல்லுாரி முதல்வர் அப்துல் காதிர், தேர்தல் பிரிவு துணைத் தாசில்தார் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் சந்திரலேகா உட்பட வருவாய்த் துறையினர் பங்கேற்றனர்.
திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் துவங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் தாலுகா அலுவலகத்தை அடைந்தது.
