ADDED : ஏப் 30, 2025 05:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்; மேலுார் தாலுகா அலுவலகத்தில் பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
ஆர்.டி.ஓ., சங்கீதா தலைமை வகித்தார். தாசில்தார் செந்தாமரை முன்னிலை வகித்தார். சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் தமிழ்தாசன், கார்த்திகேயன் உள்ளிட்டோர் பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து பேசினர். தாசில்தார்கள் ராஜபாண்டியன், மீனாட்சி, விவசாயிகள், வழக்கறிஞர்கள் மற்றும் வருவாய் துறையினர் கலந்து கொண்டனர்.

