ADDED : ஜூலை 01, 2025 02:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி தமிழ்த் துறை சுயநிதிப் பிரிவு சார்பில் ஐந்திணை தமிழ் மன்றம் சார்பில் மகளிர்கான சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
செயலாளர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். தலைவர் விஜயராகவன், முன்னாள் தலைவர் ராஜகோபால், பொருளாளர் ஆழ்வார் சாமி, முதல்வர் ராமசுப்பையா, இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தனர். பேராசிரியர் ரிஸ்வானா பர்வீன் அறிமுக உரையாற்றினர். வழக்கறிஞர் கார்த்திகேயன் பேசினார். பேராசிரியர் கவிதா நன்றி கூறினார்.
மாணவர் சுந்தரபாண்டியன் தொகுத்து வழங்கினார். பேராசிரியர் சிவசித்ரா ஒருங்கிணைத்தார்.