ADDED : அக் 22, 2024 05:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: மதுரை சவுராஷ்டிரா கல்லுாரி என்.எஸ்.எஸ்., சார்பில் சைபர் கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. கல்லுாரிச் செயலாளர் குமரேஷ் தலைமை வகித்தார். நிர்வாக குழு உறுப்பினர்கள் வெங்கடேஸ்வரன், பாலசுப்பிரமணியன், முதல்வர் ஸ்ரீனிவாசன் முன்னிலை வகித்தனர்.
சைபர் கிரைம் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் கருப்பையா, 'இணைய வழி வாயிலாக நடக்கும் பொருளாதார மோசடிகள், பண பரிமாற்றம், வங்கி விவரம் தெரிவிக்காமல் பாதுகாப்பாக பண பரிவர்த்தனை செய்வது, மோசடி செய்யும் கும்பலை கண்டுபிடிப்பது, அவர்களிடம் இருந்து பாதுகாத்துக் கொள்வது' குறித்து விளக்கினார்.
திட்ட அலுவலர்கள் விஷ்ணுபிரியா, செந்தில்குமார், பொன்ராஜ் ஒருங்கிணைத்தனர். பேராசிரியர் குணசீலன் நன்றி கூறினார்.

