ADDED : ஜூலை 27, 2025 04:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரியில் நாட்டுநலப்பணி திட்ட அணி 18ன் சார்பாக இணைய குற்றங்கள் தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
முதல்வர்(பொறுப்பு) ராஜேஸ்வர பழனிசாமி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினரான சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பிரியா இணையக்குற்றங்களால் மாணவர்களுக்கு ஏற்படும் விளைவுகள் குறித்து பேசினார். ஏட்டு கவிதா, ஆனந்தி உடன் இருந்தனர். துணை முதல்வர் செல்வமலர் நன்றி கூறினார். கல்லுாரி என்.எஸ்.எஸ்., திட்ட அதிகாரி தீபா, சுயநிதிப் பிரிவு இயக்குநர் ராமமூர்த்தி, ஆராய்ச்சிஇயக்குநர் பிரெட்ரிக் கலந்து கொண்டனர்.