நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுாரில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர்மேலாண்மை துறை சார்பில் கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விழா நடந்தது.
விழாவிற்கு அமைச்சர் மூர்த்தி தலைமை வகித்தார். விழாவில் 427 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 23 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் இலவச வீட்டு மனைபட்டா வழங்கினார். கலெக்டர் சங்கீதா, ஆர்.டி.ஓ,,ஜெயந்தி, நகராட்சி தலைவர் முகமது யாசின் பங்கேற்றனர்.

