sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

வெள்ளலுார் நாட்டில் வெற்றிலை பிரி திருவிழா

/

வெள்ளலுார் நாட்டில் வெற்றிலை பிரி திருவிழா

வெள்ளலுார் நாட்டில் வெற்றிலை பிரி திருவிழா

வெள்ளலுார் நாட்டில் வெற்றிலை பிரி திருவிழா


ADDED : ஏப் 15, 2025 06:36 AM

Google News

ADDED : ஏப் 15, 2025 06:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார்: வெள்ளலுாரில் சித்திரை மாத பிறப்பை முன்னிட்டு வெற்றிலை பிரித்து கொடுக்கப்பட்டு உழவு பணிகள் துவங்கப்பட்டன.

'வெள்ளலுார் நாடு' என்று அழைக்கப்படும் 60 கிராமங்களில் உள்ள 11 பிரிவை சேர்ந்த அம்பலகாரர்கள் தலைமையில் நேற்று கிராம மக்கள் மந்தை கருப்பண சுவாமி கோயில் மந்தையில் ஒன்று கூடினர். அதைதொடர்ந்து ஒரு பிரிவினர் தங்கத்தால் ஆன கொழுவை ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வந்து தரையில் உழுது சுவாமி கும்பிட்டனர். பின்னர் கிராமத்து சார்பில் வாங்கப்பட்ட வெற்றிலை கட்டுகள் மந்தையில் வைக்கப்பட்டு 11 பிரிவை சேர்ந்த அம்பலகாரர்களுக்கும், அவர்கள் அந்த பிரிவை சேர்ந்தவர்களுக்கும் பிரித்துக் கொடுத்தனர்.

வெற்றிலையை பெற்றவர்கள் தங்களுடைய பூஜை அறையில் வைத்து சுவாமி கும்பிட்ட பிறகு வயலுக்கு சென்று உழவு பணியை துவங்கினர்.

தும்பைப்பட்டியில் கிராமத்து சார்பில் வாங்கப்பட்ட வெற்றிலை கட்டுகள் மந்தையில் வைக்கப்பட்டு அம்பலகாரர்கள் தலைமையில் பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. அதன் பிறகு ஒவ்வொரு பிரிவை சேர்ந்தவர்கள் அழைக்கப்பட்டு முஸ்லிம்கள் வெற்றிலையை பிரித்து கொடுத்தனர். ஹிந்து முஸ்லிம் ஒற்றுமைக்காகவும் எல்லா வளமும் கிடைக்க வேண்டியும் இத்திருவிழா கொண்டாடப்படுவதாக மக்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us