sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

வீரவசந்தராயர் மண்டபத்தை சீரமைக்காமல் மீனாட்சி கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவதா ஆளும் அரசுக்கு ஆபத்து என பட்டர்கள் எச்சரிக்கை

/

வீரவசந்தராயர் மண்டபத்தை சீரமைக்காமல் மீனாட்சி கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவதா ஆளும் அரசுக்கு ஆபத்து என பட்டர்கள் எச்சரிக்கை

வீரவசந்தராயர் மண்டபத்தை சீரமைக்காமல் மீனாட்சி கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவதா ஆளும் அரசுக்கு ஆபத்து என பட்டர்கள் எச்சரிக்கை

வீரவசந்தராயர் மண்டபத்தை சீரமைக்காமல் மீனாட்சி கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவதா ஆளும் அரசுக்கு ஆபத்து என பட்டர்கள் எச்சரிக்கை


ADDED : அக் 07, 2025 05:33 AM

Google News

ADDED : அக் 07, 2025 05:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: 'மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை வீரவசந்தராயர் மண்டபத்தை தவிர்த்து நடத்தலாம் என்றால் வரும் டிசம்பரிலேயே நடத்த தயார்,' என அரசு அறிவித்த நிலையில், ஆகமவிதிப்படி கோயில் முழுவதும் திருப்பணிகள் முடிந்தபிறகே நடத்த வேண்டும் என பக்தர்கள், ஹிந்து அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 2009ல் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிேஷகம் நடத்த வேண்டும் என்பது ஐதீகம். 2018 பிப்.,2ல் கிழக்கு கோபுரத்தையொட்டியுள்ள வீரவசந்தராயர் மண்டபத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் மண்டபம் முற்றிலும் உருக்குலைந்தது. இதன் சீரமைப்பு பணி இன்னும் நடந்து கொண்டிருப்பதால் கோயில் கும்பாபிஷேகம் தள்ளிபோகிறது. இதுகுறித்து சட்டசபையில் 2 ஆண்டுகளுக்கு முன் பேசிய முதல்வர் ஸ்டாலின், '2025க்குள் கும்பாபிேஷகம் நடத்தப்படும்' என்றார்.

ஹிந்து அமைப்பினர் எதிர்ப்பு இதைதொடர்ந்து திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 70 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. அதேநேரம் கற்கள் எடுத்து வருவதில் சிரமம் உள்ளிட்ட காரணங்களால் வீரவசந்தராயர் மண்டபம் சீரமைப்பு பணி முடிய இன்னும் தாமதம் ஆகலாம்.

இதற்கிடையில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில், '2026 ஜனவரிக்குள் நடத்தப்படும்' என அறநிலையத்துறை தெரிவித்தது.

இருநாட்களுக்கு முன் கோயிலில் ஆய்வு செய்த அத்துறை அமைச்சர், 'பிப்ரவரிக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும். வீரவசந்தராயர் மண்டபத்தை தவிர்த்து நடத்தலாம் என பட்டர்கள் தெரிவித்தால் டிசம்பரிலேயே நடத்த தயார்' என அறிவித்தார். இதற்கு ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கோயில் முழுவதும் திருப்பணிகள் முழுமையாக முடிந்தபிறகே கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என ஹிந்து அமைப்பினரும், பக்தர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

அரசுக்கு ஆபத்து வரும் கோயில் பட்டர்கள் சிலர் கூறியதாவது: ஆகமவிதிப்படி முழுமையாக திருப்பணிகள் முடிந்த பிறகே கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். அரைகுறை பணிகளுடன் நடத்தினால் அது பலன் அளிக்காது. ஆளும் அரசுக்கும் ஆபத்து ஏற்படும். இதற்கு பல உதாரணங்கள் உள்ளன. 2009க்கு பிறகு 2021ல் கும்பாபிஷேகம் நடத்தி இருக்க வேண்டும். கொரோனா ஊரடங்கு, வீரவசந்தராயர் மண்டபம் சீரமைப்பு காரணமாக நடத்தப்படவில்லை. ஆகம விதிக்கு புறம்பாக வீரவசந்தராயர் மண்டபத்தை தவிர்த்து நடத்தலாம் என்றால் இரு ஆண்டுகளுக்கு முன்பே அதை செய்திருக்கலாமே. தேர்தல் நெருங்குவதால் அதற்குள் நடத்தி காட்ட வேண்டும் என்பதற்காக அவசர கதியில் திருப்பணிகள் நடந்து வருகின்றன.

வீரவசந்தராயர் மண்டபத்தை தவிர்த்து நடத்தலாமா என பட்டர்களிடம் ஆலோசிக்கப்படும் என சில பட்டர்கள் பெயரை குறிப்பிட்டு அமைச்சர் கூறினார். அவர்கள் அரசு நியமித்த குழுக்களில் இருந்தவர்கள், இருப்பவர்கள். அவர்கள் அரசின் முடிவுக்கு சாதகமாகதான் கருத்து தெரிவிக்க முடியும். 'ஆகமவிதிகளை மீறி நடத்தினால் அதற்கு பரிகாரம் செய்து கொள்ளலாம்' என அவர்கள் தெரிவித்தாலும் ஆச்சரியமில்லை. அரசின் நலன்கருதியும், கோயிலின் நலன்கருதியும் முழுமையாக திருப்பணிகள் முடிந்தபிறகே கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us