ADDED : அக் 22, 2024 05:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி தலைமை ஆசிரியர் பரமசிவம் தலைமையில் நடந்தது.
உதவித் தலைமையாசிரியர் பொன்ரமேஷ் வரவேற்றார். அய்யப்பன் எம்.எல்.ஏ., 216 மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். அ.தி.மு.க., ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.