ADDED : பிப் 10, 2026 06:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: ஐந்திணை பல்லுயிர்ச்சூழல் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பாக மதுரை லேபர் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
முன்னாள் மாணவர்கள் கார்த்திகேயன், அழகப்பன் ஒருங்கிணைத்தனர். தாளாளர் நாகசுப்ரமணியன், தலைமையாசிரியர் முத்துசெல்வம் முன்னிலை வகித்தனர்.
தாவரங்களோடு விளையாடு என்ற தலைப்பில் இலக்கிய ஆர்வலர் விஜி, இரவாடிகள் என்ற தலைப்பில் ஆய்வாளர் கிஷோர், பாம்புகள் குறித்து ஆய்வாளர் சாம்சன் கிருபாகரன், தாவரங்கள், பறவைகள் குறித்து சபரிகுருராஜா, அகில் ரிஷி பேசினர்.
ஓய்வு பேராசிரியர் நரசிம்மன், டாக்டர் பத்ரிநாராயணன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

