sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 26, 2025 ,புரட்டாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

வடக்கம்பட்டி முனியாண்டி சுவாமி கோயிலில் பிரியாணி திருவிழா

/

வடக்கம்பட்டி முனியாண்டி சுவாமி கோயிலில் பிரியாணி திருவிழா

வடக்கம்பட்டி முனியாண்டி சுவாமி கோயிலில் பிரியாணி திருவிழா

வடக்கம்பட்டி முனியாண்டி சுவாமி கோயிலில் பிரியாணி திருவிழா


ADDED : ஜன 28, 2024 07:01 AM

Google News

ADDED : ஜன 28, 2024 07:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம் : மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே வடக்கம்பட்டி முனியாண்டி சுவாமி கோயிலில் 89 வது ஆண்டு பூஜை விழா நடந்தது. இதில் பக்தர்களுக்கு பிரியாணி பிரசாதம் வழங்கப்பட்டது.

தமிழகம், வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் முனியாண்டி விலாஸ் பெயரில் ஓட்டல்கள் நடத்தி வருபவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் 2 நாட்கள் வடக்கம்பட்டியில் ஒன்று கூடி முனியாண்டி சுவாமி கோயிலில் தரிசனம் செய்வர்.

இந்நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் மலர் தட்டுக்களுடன் கிராம முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து வாணவேடிக்கைகள் முழங்க ஆட்டம், பாட்டத்துடன் முனியாண்டி சுவாமிக்கு மலர் அபிஷேகம் செய்து நேர்த்திக்கடனை நிறைவு செய்தனர்.

பக்தர்கள் தாங்கள் நேர்த்திக்கடனை தீர்க்கும் வகையில் ஆடு, சேவல்களை காணிக்கையாக அளிப்பர். அவ்வாறு அளிக்கக் கூடிய ஆடு, சேவல்களை கோயில் முன்பு பலியிட்டு, பின்பு சமைத்து அதனை பிரியாணியாக தயாரித்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவர்.

இதனால் இவ்விழா பிரியாணி திருவிழா எனப்படுகிறது. நேற்று இவ்விழாவால் வடக்கம்பட்டியே கமகம பிரியாணி மணத்தில் மிதந்தது.






      Dinamalar
      Follow us