நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை நகர் பா.ஜ., சார்பில் தெற்கு சட்டசபை தொகுதியில் தேர்தல் பணி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தேர்தல் பணிக்குழு அமைப்பாளர் துரை பாலமுருகன் தலைமை வகித்தார். துணை அமைப்பாளர் ரோஜாராணி முன்னிலை வகித்தார்.
வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், புதிய வாக்காளர் சேர்க்கை, நீக்கம் போன்றவற்றை செய்ய வேண்டும். தி.மு.க., உட்பட எதிர்க்கட்சிகள் திணறும் வகையில் பிரசாரம் செய்ய வேண்டும் என ஆலோசனை வழங்கினர்.
நகர் தேர்தல் பணிக்குழு இணை பொறுப்பாளர் மகாசுசீந்திரன், தொகுதி பொறுப்பாளர் சசிராமன், துணைத் தலைவர் சிவபாலன், மாவட்ட செயலாளர் ஜெகதீஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் இளங்கோமணி, மண்டல் தலைவர்கள் மணிமாறன், பாலமுருகன், குமரன், முரளி, திருமுருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.