sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

சினிமாவை நம்பி பா.ஜ., இல்லை

/

சினிமாவை நம்பி பா.ஜ., இல்லை

சினிமாவை நம்பி பா.ஜ., இல்லை

சினிமாவை நம்பி பா.ஜ., இல்லை


ADDED : ஜன 11, 2024 04:50 AM

Google News

ADDED : ஜன 11, 2024 04:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : ''நல்ல திட்டங்களை தருவதால்தான் மக்கள் பா.ஜ., பக்கம் உள்ளனர். சினிமாவை நம்பி பா.ஜ., இல்லை'' என ஹிந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் பேசினார்.

மதுரையில் நாதுராம் கோட்சே திரைப்பட டிரைலர் வெளியீட்டு விழாவில் அவர் பேசியதாவது:

ஜாதி வேறுபாட்டை வைத்து திரைப்படம் எடுக்கும் இயக்குநர்கள் தீண்டாமையை ஒழிக்க எண்ணவில்லை.

ஜாதி கலவரத்தை துாண்டவேண்டும் என்று உள்நோக்கத்தில் படம் எடுக்கிறார்கள். திராவிட கட்சிகள் பட்டியலின மக்களை கீழ்மட்டத்திலே வைத்துள்ளன. திறமை உள்ளவர்களை மதிக்க தெரியவில்லை.

இளையராஜாவை இசைக்கடவுளாக பாவித்து அவருக்கு உயர்பதவி வழங்கப்பட்டுள்ளது. அவரின் திறமைக்கு இதுவே போதவில்லை என்றுதான் கருதுகிறோம்.ஆட்சி அதிகாரம் கையில் உள்ளவர்களிடம் சினிமா நட்சத்திரங்கள் போக வேண்டிய கட்டாயம். படம் தயாரிப்பு,வெளியிடும் அதிகாரத்தை வைத்துள்ளதால் இவர்களை அனுசரிக்க வேண்டியுள்ளது.

நல்ல திட்டங்களை தருவதால்தான் மக்கள் பா.ஜ., பக்கம் உள்ளனர். சினிமாவை நம்பி பா.ஜ., இல்லை என்றார்.

நிகழ்ச்சியில் நிலையூர் ஆதினம், மன்னார்குடி ஜீயர்,தென்னிந்திய பா.பி., தலைவர் திருமாறன், பா.ஜ., நகர் தலைவர் மகா சுசீந்திரன், ஹிந்து மக்கள் கட்சிமாவட்ட தலைவர் சோலைகண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us