/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
/
கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 06, 2026 06:27 AM
மதுரை: மதுரை கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை, சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கத்தினர் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாவட்ட தலைவர் மாரி தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் பரமேஸ்வரன் துவக்கி வைத்தார். செயலாளர் பாண்டியன், சாலைப்பணியாளர் பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்துவது உட்பட நான்கு அம்ச கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
அரசு ஊழியர் சங்க முன்னாள் தலைவர் சோலையன், கல்லுாரி ஆசிரியர் கழகம் பெரிய தம்பி, பார்த்தசாரதி உட்பட பலர் பேசினர். அரசு ஊழியர் சங்க தலைவர் சின்னப்பொண்ணு, கூட்டமைப்பு நிர்வாகிகள் முனியசாமி, முகமது அன்சாரி, கல்யாண சுந்தரம், அமுதா, ஆறுமுகம் பங்கேற்றனர்.

