sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

5 கி.மீ., இழுத்து செல்லப்பட்ட லாரியில் சிக்கிய வாலிபர் உடல்

/

5 கி.மீ., இழுத்து செல்லப்பட்ட லாரியில் சிக்கிய வாலிபர் உடல்

5 கி.மீ., இழுத்து செல்லப்பட்ட லாரியில் சிக்கிய வாலிபர் உடல்

5 கி.மீ., இழுத்து செல்லப்பட்ட லாரியில் சிக்கிய வாலிபர் உடல்


ADDED : ஏப் 19, 2025 12:40 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 12:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாடிப்பட்டி:மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே வடுகப்பட்டியைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் சூரியபிரகாஷ், 30. லாரி ஷெட்டில் வேலை செய்தார். இவரது மனைவி பிரியா, 25. மகள்கள் சோபா ஸ்ரீ, 3 மற்றும் ஒன்பது மாத மகள் ரியாஸ்ரீ உள்ளனர். நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு வாடிப்பட்டியில் இருந்து டூ - -வீலரில் ஊர் திரும்பினார்.

ஆண்டிப்பட்டி பங்களா அருகே ஹரியானாவில் இருந்து மதுரை நோக்கி சென்ற லாரியின் பின்சக்கரத்தில் டூ - வீலருடன் சிக்கினார். அவரது உடல் 5 கி.மீ., வரை இழுத்துச் செல்லப்பட்டது.

கட்டப்புளி நகர் பகுதியில் வந்தபோது, துக்க வீட்டில் இருந்தவர்கள், லாரியில் உடல் சிக்கி இருப்பதைக் கண்டு, டூ - வீலரில் பின்தொடர்ந்து சென்று தகவல் தெரிவித்தனர்.

அதன்பிறகே டிரைவருக்கு தெரியவந்தது. இடதுகால் துண்டான நிலையில், சூர்யபிரகாஷ் உடல் மீட்கப்பட்டது. அதிகாலை எங்கு சென்றார், விபத்து நடந்தது எப்படி என்பது குறித்து, சமயநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us