ADDED : ஜன 01, 2026 05:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுாரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் நுால் வெளியீட்டு விழா நடந்தது. செயலாளர் கண்ணன் வரவேற்றார். தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார்.
கவிஞர்கள் எரியீட்டி, காளிமுத்து, மாவட்ட பொருளாளர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். எழுத்தாளர் மருது பாரதி எழுதிய முன்னாள் சங்கத் தலைவரான கருப்பையா பாரதியின் வாழ்க்கை வரலாற்று நுாலை மாவட்ட குழு உறுப்பினர் சர்மிளா வெளியிட, மாநில குழு உறுப்பினர் பிரேமலதா பெற்றுக்கொண்டார். மாநில நிர்வாகிகள் வெண்புறா,கவிஞர் ஸ்ரீ ராஜா, காமாட்சி, மாவட்ட தலைவர் தமிழ்ராஜ், செயலாளர் பாரதி, எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் பேசினர். பொருளாளர் சுந்தரபாண்டியன் நன்றி கூறினார்.

