UPDATED : ஆக 15, 2026 11:03 PM
ADDED : ஆக 15, 2026 10:51 PM
மதுரை:மதுரை சின்மயா மிஷனில் சுவாமி சிவயோகானந்தா எழுதிய ஆதிசங்கரரின் 'பிரஷ்னோத்தர ரத்னமாலிகா' நுாலின் ஆங்கில மொழிபெயர்ப்பு மற்றும் விளக்கவுரை வெளியீட்டு விழா நடந்தது.
உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நுாலை வெளியிட்டு பேசுகையில், ''அனைத்து இடங்களிலும் 'ஜென் சி'க்கள் மூலம் மாற்றம் நிகழ்ந்து வருவதால் அவர்களுடன் ஒன்றுபடுவது அவசியம். அதற்கேற்ப அறிவுசார் சிந்தனை திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆதிசங்கரரின் இந்நுாலை படித்தாலே அவர்களை திருப்திபடுத்த முடியும்,'' என்றார். நுாலின் முதல் பிரதியை அரசு மருத்துவமனை ஓய்வுபெற்ற நரம்பியல் நிபுணர் ராமசுப்பிரமணியன், மீனாட்சி மிஷன் மருத்துவமனை மருத்துவத்துறைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி பெற்று கொண்டனர். சுவாமி சிவயோகானந்தா ஏற்புரை வழங்கினார். விஸ்வாஸ் புரமோட்டர்ஸ் நிர்வாக இயக்குநர் சங்கர சீத்தாராமன் உட்பட ஆன்மிக ஆர்வலர்கள் பலர் பங்கேற்றனர்.
