ADDED : ஜன 19, 2026 05:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை பாலம், ரோடு பணிகளை தலைமை பொறியாளர் சத்யபிரகாஷ் ஆய்வு செய்தார்.
மேலமடை, கோரிப்பாளையம் பகுதிகளில் மேம்பால பணிகள் நடக்கிறது. சமயநல்லுார் - மதுரை பாத்திமா கல்லுாரி வரை, விரகனுார் ரிங்ரோடு-சக்குடி இடையே என 2 பகுதிகளிலும் வைகை வடகரையில் புதிய ரோடுகள் அமைகிறது.
சக்குடி ரோடு ரூ.130 கோடியில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான துவக்கப் பணிகள் குறித்து தலைமை பொறியாளர் சத்யபிரகாஷ் ஆலோசனை நடத்தினார். ரோடு அமைய உள்ள பகுதியை ஆய்வு செய்தார். இதையடுத்து கோரிப்பாளையம் மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்தார். அவருடன் கண்காணிப்பு பொறியாளர் செல்வநம்பி, கோட்டப் பொறியாளர் மோகனகாந்தி, உதவி கோட்டப் பொறியாளர்கள் ஆனந்த், சுகுமாறன் இருந்தனர்.

