நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: விக்கிரமங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க கட்டடத்தில் காரை பெயர்ந்து, விரிசலடைந்து சேதம் ஏற்பட்டிருந்தது. நெல் கோடவுன் படிக்கட்டு இடிந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. இங்கு தினமும் கடன், உரம் வாங்குவதற்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இதனால் விபரீதம் விளைய வாய்ப்பிருந்தது.
இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கட்டடத்தை சீரமைத்தனர். இதனால் அப்பகுதியினர் அதிகாரிகள், தினமலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.

