ADDED : பிப் 19, 2024 05:01 AM

மேலுார் : மேலுார், தெற்குப்பட்டியில் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு அ.தி.மு.க., சார்பில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா துவக்கி வைத்தார். மேலுாா் எம்.எல்.ஏ., பெரியபுள்ளான், அவைத் தலைவர் ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பெரியமாடு பந்தயத்தில் 15 ஜோடி மாடுகளும், சிறியமாடு பந்தயத்தில் 41 ஜோடி மாடுகள் கலந்து கொண்டதால் இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டது.
பெரியமாடு பந்தயத்தில் அவனியாபுரம் மோகன்சாமிகுமார், சொக்கம்பட்டி செந்தில், நல்லாங்குடி கதிமுத்தையா, மேலுார் அழகன் கவுசிக் மாடுகள் முதல் நான்கு பரிசுகளை வென்றன.
சிறியமாடு பந்தயத்தில் மேலுார் தெற்குப்பட்டி பிரேம், அமராவதி புதுார் வேலுகிருஷ்ணன் முதல் பரிசையும், பாண்டிகோவில் பாண்டிச்சாமி, மேலுார் சிக்கிபாய் இரண்டாம் பரிசையும்,கூலையனுார் சேகர், வலசை பொன்னழகியம்மன் மூன்றாம் பரிசையும், பண்ணைபுரம்சோக்ஜன்னா, பாண்டாங்குடி முருகேஷ் மாடுகள் நான்காம் பரிசுகளை வென்றன.

