ADDED : டிச 28, 2025 06:05 AM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: சோழவந்தான் நாராயணன் நகரில் சாக்கடை கால்வாய், ரோடு அமைக்கப் படவில்லை. மழைக்காலங்களில் வடிகால் வசதியின்றி தண்ணீர் தேங்கும் நிலை இருந்தது. மேலும் மண்ரோடாக இருந்ததால் சேறும் சகதியுமாகி நடந்து கூட செல்ல முடியாத நிலை இருந்தது.
இது குறித்து தினமலர் நாளிதழில் சில நாட்களுக்கு முன்பு செய்தி வெளியானது.
இதையடுத்து பேரூராட்சி அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்தனர். ரோட்டை சீரமைத்து, சாக்கடை கால்வாயை அமைத்தனர். அப்பகுதி மக்கள் அதிகாரிகள், தினமலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.
