ADDED : ஜூலை 06, 2025 03:51 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை அண்ணாநகர் சதாசிவநகர் வெள்ளை விநாயகர் கோயில் வளாகத்திலுள்ள அரசமர சுயம்பு விநாயகர் சன்னதியில் திருவிளக்கு பூஜை நடந்தது.
இதையொட்டி சுயம்பு விநாயகருக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. மேயர் இந்திராணி பொன்வசந்த் திருவிளக்கு பூஜையை துவக்கி வைத்தார். ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
