sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மாடக்குளம் கண்மாய் தடுப்புச்சுவர் முறையாக அமைக்க வழக்கு

/

மாடக்குளம் கண்மாய் தடுப்புச்சுவர் முறையாக அமைக்க வழக்கு

மாடக்குளம் கண்மாய் தடுப்புச்சுவர் முறையாக அமைக்க வழக்கு

மாடக்குளம் கண்மாய் தடுப்புச்சுவர் முறையாக அமைக்க வழக்கு


ADDED : ஏப் 03, 2025 04:40 AM

Google News

ADDED : ஏப் 03, 2025 04:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை மாடக்குளம் கண்மாய்க் கரையில் சாலை பணியுடன் நடக்கும் தடுப்புச்சுவர் கட்டுமானத்தை முறையாக மேற்கொள்ள தாக்கலான வழக்கில் மனுவை பெரியாறு வைகை பாசன கோட்ட செயற்பொறியாளர் பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரை வழக்கறிஞர் பாலமுருகன் தாக்கல் செய்த பொதுநல மனு: மாடக்குளம் கண்மாய்க் கரையில் ரோடு அமைக்கும் பணி நடக்கிறது. விராட்டிபத்து அருகில் அமைய உள்ள பைபாஸ் சாலையுடன் இணைக்கப்படும்.

கண்மாய்க் கரை ஓரங்களில் தடுப்புச்சுவர் அமைக்கப்படுகிறது. அதற்கு எர்த் பீம், கான்கிரீட் துாண்கள் அமைக்கவில்லை. முறையான, முழுமையான கட்டுமானமாக இல்லை. மழைக்காலத்தில் நீர்வரத்து அதிகரித்தால் தடுப்புச்சுவர் சேதமடையும். மக்களின் வரிப்பணம் விரையமாகும்.

கரையை பலப்படுத்த முறையாக தடுப்புச்சுவர் அமைக்க வலியுறுத்தி மாநகராட்சி கமிஷனர், நீர்வளத்துறை பெரியாறு வைகை பாசன கோட்ட செயற்பொறியாளருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு: பெரியாறு வைகை பாசன கோட்ட செயற்பொறியாளர் 8 வாரங்களில் மனுவை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us