/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அரசு வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்தவர் மீது வழக்கு
/
அரசு வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்தவர் மீது வழக்கு
அரசு வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்தவர் மீது வழக்கு
அரசு வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்தவர் மீது வழக்கு
ADDED : நவ 30, 2024 05:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்; பேரையூர் தாலுகா லட்சுமிபுரம் சிவபெருமாள் மனைவி ஜானகி. இவர் டிகிரி முடித்துள்ளார்.
அதே ஊரைச் சேர்ந்த குமரேசன், சென்னை தலைமைச் செயலகத்தில் வேலை பார்ப்பதாக கூறி வந்துள்ளார். இந்நிலையில் ஜானகிக்கு மருத்துவத்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி 4 லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டு நீண்ட நாட்களாக ஏமாற்றி வந்துள்ளார். ஜானகி குடும்பத்தினர் தொடர்ச்சியாக குமரேசனிடம் கேட்டுள்ளனர்.
இதையடுத்து மருத்துவ காப்பாளர் பணி நியமன ஆணையை குமரேசன் கொடுத்துள்ளார். போலி நியமன ஆணை என அறிந்த ஜானகி , பேரையூர் போலீசாரிடம் புகார் அளித்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.