sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தென்னை மரங்கள் இழந்ததற்கு இழப்பீடு கோரிய வழக்கு தள்ளுபடி * உயர்நீதிமன்றம் உத்தரவு

/

தென்னை மரங்கள் இழந்ததற்கு இழப்பீடு கோரிய வழக்கு தள்ளுபடி * உயர்நீதிமன்றம் உத்தரவு

தென்னை மரங்கள் இழந்ததற்கு இழப்பீடு கோரிய வழக்கு தள்ளுபடி * உயர்நீதிமன்றம் உத்தரவு

தென்னை மரங்கள் இழந்ததற்கு இழப்பீடு கோரிய வழக்கு தள்ளுபடி * உயர்நீதிமன்றம் உத்தரவு


ADDED : மே 31, 2025 05:11 AM

Google News

ADDED : மே 31, 2025 05:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் அருகே 380 தென்னை மரங்களை இழந்ததற்கு இழப்பீடு கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை.

திருச்சி ஸ்ரீரங்கம் தனலட்சுமி தாக்கல் செய்த மனு: வேடசந்துார் அருகே சுக்காம்பட்டியிலுள்ள என் நிலத்தில் 380 தென்னை மரங்கள் இருந்தன. இதற்குரிய நீராதாரம் தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. இதனால் தென்னை மரங்களுக்கு தண்ணீர் வினியோகிக்க முடியவில்லை.

சொட்டு நீர் பாசன திட்டத்தை நிறுவ வடமதுரையிலுள்ள வேளாண் துறையை அணுகினேன். மானியத் தொகையை வேளாண் உதவி இயக்குனர் வழங்க மறுத்தார். இதனால் தென்னை மரங்களுக்கு நீர் பாய்ச்ச முடியவில்லை. அவை வீணாகி விட்டன. அரசு மானியத்தை விடுவிக்கத் தவறியதால் எனக்கு இழப்பு ஏற்பட்டது. இழப்பீடு கோரி கலெக்டரிடம் மனு அளித்தேன். அவர் சொட்டு நீர் பாசனத் திட்டத்தின் கீழ் மானியம் பெற மீண்டும் விண்ணப்பிக்குமாறு உத்தரவிட்டார். இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். (வழக்கு நிலுவையில் இருந்த காலகட்டத்தில் மனுதாரர் இறந்தார். அவரது சட்டப்பூர்வ வாரிசு ஸ்ரீதர் மனுதாரராக தொடர உயர்நீதிமன்றம் அனுமதித்தது)

நீதிபதி வி.லட்சுமிநாராயணன்: இழப்பீடு வழங்குவதற்கு ஆதாரமான காரணங்கள் தேவை. மாநில அரசின் செயல்பாடு அல்லது செயலற்ற தன்மையால் சேதம் ஏற்பட்டதாக நேரடியாகக் கூறப்படாவிடில் இழப்பீடு வழங்க முடியாது.

சொட்டு நீர் பாசனத்திற்கு மானியம் வழங்க மறுத்ததே தென்னை மரங்கள் பட்டுப்போனதற்கு நேரடிக் காரணம்; ஆக்கிரமிப்புகளால் வறண்டு விட்டன என மனுதாரர் தரப்பு கூறுகிறது. இதற்கு வாய்மொழி மற்றும் ஆவண ஆதாரங்கள் தேவை. மனுதாரர் கோரும் நிவாரணத்தை வழங்க முடியாது. சம்பந்தப்பட்ட சிவில் நீதிமன்றத்தை நாடலாம். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us