sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்களை நியமிக்க வழக்கு

/

ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்களை நியமிக்க வழக்கு

ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்களை நியமிக்க வழக்கு

ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்களை நியமிக்க வழக்கு


ADDED : ஆக 02, 2025 01:34 AM

Google News

ADDED : ஆக 02, 2025 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை அப்துல் ரஹ்மான் ஜலால். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: ஒத்தக்கடை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர், நர்ஸ்கள் பற்றாக்குறை உள்ளது. கர்ப்பிணிகளை பரிசோதிக்கும் 'அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்' கருவியை இயக்க பயிற்சி பெற்ற டாக்டர், ரேடியாலஜிஸ்ட் இல்லை. ஸ்கேனை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். டாக்டர், நர்ஸ், சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கர்ப்பிணிகள், நோயாளிகள் பயன்பாட்டிற்கு போதிய கட்டட வசதி செய்ய வலியுறுத்தி தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலர், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ஆர்.பூர்ணிமா அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் அழகுமணி ஆஜரானார். நீதிபதிகள்,'மனுவை அதிகாரிகள் 8 வாரங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us