sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பழுதடைந்த கட்டடங்களை அகற்ற வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

/

பழுதடைந்த கட்டடங்களை அகற்ற வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

பழுதடைந்த கட்டடங்களை அகற்ற வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

பழுதடைந்த கட்டடங்களை அகற்ற வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்


ADDED : ஜூலை 30, 2025 12:31 AM

Google News

ADDED : ஜூலை 30, 2025 12:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : தமிழகத்தில் பராமரிப்பின்றி பழுதடைந்துள்ள கட்டடங்களை அகற்ற தாக்கலான வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

சேலம் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான பல கட்டடங்கள் பராமரிப்பின்றி இடியும் நிலையில் உள்ளன. ஆபத்தான சூழலில் அதனை பயன்படுத்தி வருகின்றனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலருகே அதற்குரிய போலீஸ் ஸ்டேஷன் உள்ளது.

அக்கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அக்கட்டடத்தின் மீது மரங்கள் வளர்ந்துள்ளன.மழைக்காலம் துவங்க உள்ளது. பராமரிப்பின்றி பழுதடைந்த நிலையிலுள்ள கட்டடங்களை அகற்ற தமிழக பொதுப்பணித்துறை செயலருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரிய கிளீட் அமர்வு விசாரித்தது. மனுதாரர் ஆஜரானார்.

தமிழக பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலர்கள் 2 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us